வெள்ளி, 4 ஜனவரி, 2013

கீதாஞ்சலி .ஒரு ஜீவன்


படம் : கீதாஞ்சலி
பாடல் : ஒரு ஜீவன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்.. ஹோ..
என்னை கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்.. ஹோ
நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்த நாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மண மாலை சூடும் நாள் பார்க்கவே

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில்
மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் உந்தன்
நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா
நிழல் தந்து விலகுமா
இனிமேலும் என்ன சந்தேகமா

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக